Friday, December 24, 2010
புரிதல்
பிறந்த பின்
ஆண்டுகள்
ஓடிய பின்னர்
புரிந்துகொண்டேன்
பிறந்தேன் என்பதை
நிகழ்தலில் இல்லை
நிகழ்வது என்பது
புரிதலின்போதே
நிகழ்தல் அறிந்தேன்
காதல் செய்ததோ
இருபது வயதில்
காதல் உணர்ந்ததோ
ஐம்பது வயதில்
வாழ்தலில் இல்லை
வாழ்க்கை என்பதும்
வாழ்தல் முடிந்த பின்
வாழ்க்கை உணர்தலும்
வாழ்க்கையின் முழுமை
என்பதை அறிந்தேன்
எனில்,
சாதல் அடைந்த பின்
சாதலே இன்றி
இருப்பதும் நிஜம் எனில்
இறந்திட மாட்டேன்!
- பா.கிருஷ்ணன்
(vikatan, 29, Dec)
Tuesday, December 21, 2010
Sunday, December 12, 2010
கோப்பை முழுதும் மழை

கேள்விகள் இருந்தன
நிறைய சமாளிப்புகள்
நிறையக் குற்றச்சாட்டுகள்
நிறையக் கோபங்கள்
நீ கை அசைத்துப் போகும்போது
என்னிடம் ஒரு காதல் இருந்தது
கொஞ்சம் தேநீர் இருந்தது
நிறைய மழை இருந்தது!
vikatan(15 Dec)
http://new.vikatan.com/article.php?aid=461&sid=15&mid=1
Subscribe to:
Posts (Atom)