Saturday, January 29, 2011

மழைபேச்சு

காட்டுக்குள் தொலைதல்தான்
கட்டிலில் தொலைதலும்

தற்குப் பிறகும் என்னை
அதிகாலையிலேயே எழுப்பி வந்து
வெகுநேரம் விளையாடுகிறாய் இறகுப் பந்து

மேற்கே பார்க்க முத்தமிடு
கிழக்கே பார்த்து முத்தமிடு

ச்சத்தில்
மீசை முளைத்துப் பார்த்தாய் நீ
பெண்ணாகிப் போயிருந்தேன் நான்

ண்ணீருக்கு மிக நெருங்கிய
உயரத்தில் சிறகடிக்கும்
பறவையும் பறவையின் நிழலும் நாம்

நெற்றி முடியைச் சரிசெய்வதாகத்தான் தொடங்குகிறது
பெரும்பாலும் அது

திகாலைக்குக் கிடைத்தது
தேனழித்துப் படுத்த ஆதிவாசிகளின்
அதே வாசம்

து
மேகங்களுக்கிடையே திணறிய
வானூர்தியின் தருணம்

ற்றைக் காற்றுக்கு ஒரே நொடியில்
பொலபொலவென உதிர்தல் இல்லை
வாதாம் மரத்துப் பழுத்த இலைகளைப்போல்
இசைக் குறியீடுகளாய் இறங்குவது

றித் தளும்பும் கேணி
தும்பியின் தொடுதலில் வழிகிறது!


--Aruvumathi (vikatan, feb 2, 2011)

Thursday, January 6, 2011

ஒற்றை வரி
உறங்குகிறது
அதில் மொத்த கவிதையும்
விழித்திருக்கிறது


- http://raajaachandrasekar.blogspot.com/2011/01/blog-post_9206.html