Monday, August 9, 2010

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
...கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
- :)

Sunday, August 8, 2010

இத்தனை காலங்களுக்குப் பிறகும் கூட
சூரியன் பூமியிடம் சொல்வதில்லை;
'நீ எனக்குக் கடமைப்பட்டிருக்கிறாய்'

அதுபோன்ற அன்பால்
என்ன நேர்கிறதென்று பாருங்கள்.
அது முழு ஆகாயத்தையும் சுடரச்செய்கிறது.

- Hafeez


http://vaalnilam.blogspot.com/2010/07/blog-post.html

Saturday, August 7, 2010

ஈடு

வயிற்றில்
வாங்கிக் கொள்ளவியலுமா
அம்மாவை - இறப்பை இறப்பால்
ஈடுசெய்ய நிகழுமா- அன்பிற்கு ஈடாகாது
அன்பும்
 - By Brinda
( http://vaalnilam.blogspot.com/2010_01_01_archive.html )