Monday, August 9, 2010

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
...கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
- :)

Sunday, August 8, 2010

இத்தனை காலங்களுக்குப் பிறகும் கூட
சூரியன் பூமியிடம் சொல்வதில்லை;
'நீ எனக்குக் கடமைப்பட்டிருக்கிறாய்'

அதுபோன்ற அன்பால்
என்ன நேர்கிறதென்று பாருங்கள்.
அது முழு ஆகாயத்தையும் சுடரச்செய்கிறது.

- Hafeez


http://vaalnilam.blogspot.com/2010/07/blog-post.html

Saturday, August 7, 2010

ஈடு

வயிற்றில்
வாங்கிக் கொள்ளவியலுமா
அம்மாவை - இறப்பை இறப்பால்
ஈடுசெய்ய நிகழுமா- அன்பிற்கு ஈடாகாது
அன்பும்
 - By Brinda
( http://vaalnilam.blogspot.com/2010_01_01_archive.html )

Saturday, July 31, 2010

சாத்துயர் உறுதல் அல்லது பிரிவு

ஒற்றைமரத்தின் ஒரே இலை விழுகிறது.
சிறுதுண்டு பூமியும் கீழே இல்லை.
விழுந்துகொண்டிருக்கிறது

- thiru.பெருந்தேவி

http://www.kalachuvadu.com/issue-127/page42.asp

Wednesday, June 30, 2010

ஆண்கள் அறிக...

காதல் சொல்லும் கணத்தில்கூட
முதல் காதலிக்கான கவிதை
வாசிக்கப்படுகிறது. கல்யாணத்துக்கு நெருக்கும்
பழுத்த காதலிகளிடம்
இன்னும் வயதுக்கு வராத
உங்கள் தங்கையின்
திருமணத்தைப்பற்றிப் பதறுகிறீர்கள்...
உங்களை நம்பி ஓடி வந்து
மாலை மாற்றிக்கொண்டவளிடம்
'என் அம்மாவைவிட்டு
வந்துவிட்டேனே' என்று
புலம்புகிறீர்கள்...
அடுப்படியில் வெந்து விறுவிறுக்க
மனைவி தயாரித்த மணத்தக்காளிக் குழம்பை
உறிஞ்சிக்கொண்டே,
'என் அம்மா வைத்தால்
ஊரே மணக்கும்' என்கிறீர்கள்...
'என் மனைவிக்கு மிகவும் பிடித்தது
மல்லிகைப் பூ' என்று
கைம்பெண்ணிடம் பூ வாங்கும்போது
முணுமுணுக்கிறீர்கள்...
வாழ்வின் விளிம்பில்
ஊசலாடிக்கொண்டு இருப்பவளிடம்
எப்படி உங்கள் பெண் குழந்தைகள்
தேவதைகளாக இருந்து
உங்களைக் காக்கிறார்கள்
என்று வியக்கிறீர்கள்...
மரணப் படுக்கையில் இருப்பவளிடம்
உங்கள் மனைவி பிரசவத்தில்
பிழைத்த கதையையும்
விபத்தில் சிக்கியவளிடம் உங்கள்
குருதிக் கொடையால் கண் விழித்த
கல்லூரிப் பெண்கள்பற்றியும்
விவரிக்கிறீர்கள்...
பிள்ளையற்றவளிடம் உங்கள்
பாட்டி பெற்ற பதினாறைப்
பட்டியலிடுகிறீர்கள்...
நாட்டியக்காரியின் வீட்டை
நாடி வந்துவிட்டு
அவள் காலை நக்கிக்கொண்டே
உங்கள் வீட்டுக் 'குத்து விளக்கை' எண்ணிக்
கண்ணீர் உகுக்கிறீர்கள்...
காதலோடு நீங்கள் பேச ஆரம்பிக்கும்
ஒரு பொழுதேனும் இடைமறித்து
'அந்த மகிழம்பூ மரத்தடியில் வைத்து
மகேந்திரன் கொடுத்த முத்தத்துக்கு
ஈடாகாது எதுவும்' என்று
சொல்ல வேண்டும்.
கண்ணகிகளை மாதவியாக்கும்போது
நீங்கள் நகுலன் அல்லது
சகாதேவனாகிறீர்கள்.
இடம் பொருள் ஏவலற்றுப்
பிற பெண்களைப்பற்றிப் பேசும்
ஆண்கள் அறிக,
உங்களுக்கான முத்தம்
வேறொரு உதட்டில்
இடப்பட்டுவிட்டது!
- By Thaamarai (Vikatan, june 2010)

Friday, May 14, 2010

ஏன் இப்படி..

வளர்ச்சியின் உச்சகட்ட படியில் நின்றுகொண்டு
கீழ்நோக்கி பார்த்து
நகைக்கிறான் மனிதன்...
யாருக்கு தெரியும்?
எளிமையின் உச்சகட்டத்திளிருந்துகொண்டு 
அமீபா(amebae ) நகைத்துக்கொண்டிருக்கலாம்..

By: Kavi. Thaamarai
source:  http://www.youtube.com/watch?v=-bVhJU2So40

Wednesday, May 5, 2010

raajaachandrasekar.blogspot.com

பக்கங்கள்
மாற்றிப் படித்த கதையில்
இன்னொரு புத்தகம்
src:
http://raajaachandrasekar.blogspot.com/2010/04/blog-post_22.html

புல்லாங்குழலில் விழுந்த எறும்பை
எடுத்துப் போட்டேன்
இசையில் விழுந்த எறும்பை
முடியவில்லை 
src: http://raajaachandrasekar.blogspot.com/2010/05/blog-post_5101.html

Sunday, May 2, 2010

மலையாள மொழிபெயர்ப்பு கவிதைகள் - http://www.kalachuvadu.com/issue-124/page39.asp

Source: Kaalachuvadu.com